கடற்கரை – தாம்பரம் உள்ளூர் இரயில் பாதை மிக நெருக்கமாக சென்னை மக்களின் வாழ்க்கையுடன் இணைந்துள்ளது. சுவாரஸ்யமாக, இந்த ஒற்றை நீளத்திற்குள், ஒவ்வொரு நிலையமும் அடிக்கடி இரயிலில் ஏறி/இறங்கும் மக்களுக்கு குறிப்பிட்ட ஆளுமையைப் பூசுகிறது மேலும் கீழே பட்டியலிடப்பட்டுள்ள வகைகளில் ஏதாவது ஒன்றில் 10-ல் 8 நபர்கள் இருப்பார்கள் என்று நீங்கள் பந்தயம் கட்டலாம்.
சென்னை கடற்கரை: முறையான ஆடைகளை நீங்கள் அணிந்திருந்தால், அனைத்து முக்கியமான வங்கிகளின் மண்டல அலுவலகங்கள் மற்றும் தலைமை அலுவலகங்கள் சென்னை கடற்கரை நிலையத்தின் அருகே அமைந்துள்ள காரணத்தால் நீங்கள் வங்கியாளர்களில் ஒருவராக இருக்க வேண்டும். எனினும், நீங்கள் முறையான ஆடைகள் அணிந்து கொள்ளவில்லை என்றால், வெளிபுறத்தில் கரடுமுரடானவராக பொதுவாக மதராஸ் தமிழ் பேசும் ‘நார்த்-மதராஸ்(வட-சென்னை)’ மக்கள் என்று அழைக்கப்படுபவர்களின் மத்தியில் ஒருவராக மேலும் அநேகமாக பணி அல்லது ஷாப்பிங் செய்வதற்காக பர்மா பஜாருக்கு செல்பவராக இருக்க வேண்டும்
சென்னை கோட்டை: சென்னை மாநகராட்சி இந்த நிலையத்தின் நேர் எதிரில் தான் செயல்படுகிறது மேலும் இங்கு தான் மாநகராட்சியின் பணியாளர்கள் அவர்களின் பணியிடத்தை அடைவதற்கு இறங்குகிறார்கள். வாரத்தில் ஐந்து நாட்களுக்கு இந்த நிலையத்திற்கு நீங்கள் அடிக்கடி பயணித்தால், அரசாங்க துறைகளின் மிகப் பெரிய திகைப்பில் பணி செய்யும் பல மாநகராட்சி பணியாளர்களின் மத்தியில் நீங்கள் ஒருவராக இருப்பீர்கள்.
பூங்கா: இந்த நிலையத்தில் அலுவலக பையுடன் மக்களை நீங்கள் பார்ப்பதற்கான வாய்ப்பு குறைவு. பூங்கா சென்னை மத்திய இரயில் நிலையத்திலிருந்து நீண்ட தூரம் பயணம் செய்வதற்கான இரயில்களைப் பிடிப்பதற்கு மிகப் பெரிய டிராலிகள் மற்றும் முரட்டுக் கம்பளித்துணியால் உருவாக்கப்பட்ட பைகளுடன் மக்கள் அவசரமாக செல்லும் நிலையமாகும். பூங்கா அனைத்து முக்கியமான இரயில்களும் புறப்படும், சென்னை செட்ரலை இணைக்கும் நிலையமாகும்.
எழும்பூர்: எழும்பூர் பல எக்ஸ்பிரஸ் இரயில்கள் மூலம் தமிழ்நாட்டின் தென் பகுதிகளை தலைநகரத்துடன் இணைக்கும் சென்னயிலுள்ள மற்றொரு முக்கியமான இரயில் நிலையமாகும். எனவே, இந்த நிலையமும் அலுவலக பைகள் அல்லது பிரீஃப்கேஸ்களுக்கு மாறாக முரட்டுக் கம்பளித்துணியால் உருவாக்கப்பட்ட பைகள் மற்றும் மிகப் பெரிய டிராலிகளுடன் இருக்கும் மக்களுக்கான இடமாகும்.
சேத்துப்பட்டு: இது முரண்பாடான நிலையமாகும். சேதுப்பட்டு என்பது சென்னையிலுள்ள மிகப் பெரிய செல்வந்தர்கள் அவர்களின் ஆடிஸ் மற்றும் BMW-களுடன் தங்கும் பகுதியாகும். எனினும், இரயில்களில் நீங்கள் பார்க்கும் பெரும்பாலான விற்பனையாளர்கள் மற்றும் பிச்சைகாரர்கள், தினமும் இரவில் சேத்துப்பட்டு தளத்தில் ஓய்வெடுப்பதை நீங்கள் பார்க்கலாம்.
நுங்கம்பாக்கம் : இந்த நிலையம் தினமும் 9-5 மணி வரையில் பணி செய்யும் சென்னையின் நடுத்தர வர்க்கத்தின் இதயமாகும். வங்கிகள், வர்த்தக வளாகங்கள், உணவகங்கள் போன்று பரந்த அளவிலான இடங்களில் பணி செய்ய செல்லுவதற்கான மையமாக நுங்கம்பாக்கம் உள்ளது. அத்துடன், சென்னையின் லயோலா கல்லூரி சரியாக நிலையத்தின் நுழைவாயிலில் அமைந்துள்ளது அதனால் இந்த நிலையத்தில் பல மாணவர்கள் இறங்குகிறார்கள்.
கோடம்பாக்கம்: கோடம்பாக்கம் ஆர்வமுள்ள உதவி இயக்குனர்கள், நாளைய நடிகர்கள் மற்றும் திரைக்குப் பின்னால் இருக்கும் தொழில்நுட்பவியலாளர்கள் அனைவருக்கும் மையமாக உள்ளது. இது கனவுகளின் காப்பகமாகும். இந்தப் பகுதியில் எளிமையான வழியில் வாழும் மக்கள் தமிழ் சினிமாவில் அடுத்த பெரிய விஷயமாக இருக்கலாம். எனவே, இந்த நிலையத்தில் இருக்கும் மக்கள் திரைப்பட துறையிலிருந்து சில உட்புற செய்திகளைப் பேசிக் கொண்டு நேரத்தை கழிப்பதைப் பார்த்து ஆச்சரியப்பட வேண்டாம்.
மாம்பலம் : இது சென்னையின் விருப்பமான ஷாப்பிங் இடமாகும். தி-நகர் ஹெர்பின்களிலிருந்து வீட்டு உபகரணங்கள் வரையில் அனைத்தையும் நீங்கள் வாங்கக்கூடிய இடமாகும். ஆயிரக்கணக்கான மக்கள் விற்பனையாளர்களாக கடைகளில் பணி செய்ய இங்கே வருகிறார்கள் மேலும் ஆயிரக்கணக்கானவர்கள் ஷாப்பிங் செய்யும் நோக்கத்துடன் வருகிறார்கள். கிட்டத்தட்ட நீங்கள் இங்கே பார்க்கும் அனைத்து நபர்களும் பெரிய கடைகளின் பெயர்கள் அச்சிடப்பட்டத்துடன் ஷாப்பிங் பைகளை எடுத்துச்சென்று கொண்டிருப்பார்கள்.
சைதாப்பேட்டை: சைதாப்பேட்டை நடுத்தர வர்க்கம் மற்றும் தாழ்ந்த நடுத்தர வர்க்கத்தின் சுவாரஸ்யமான குடியிருப்பு பகுதியாகும். நிலையத்தைச் சுற்றியுள்ள அனைத்து பகுதிகளின் குடியிருப்பு இடங்களிலிருந்து மக்களுக்கான மையமாக நிலையம் உள்ளது. இந்த நிலையத்தின் எதிரே சில அரசாங்க அலுவலகங்கள் உள்ளன.
கிண்டி: கிண்டி தொழிற்பேட்டை சென்னையின் உற்பத்தியாளர் துறைக்கான அலுவலக இடங்களின் மையமாக உள்ளது. இந்த உற்பத்தி ஆலைகளின் பணியாளர்கள் அவர்களின் போக்குவரத்து முறையாக இரயில்களைப் பயன்படுத்துகிறார்கள் மேலும் அவர்கள் சிறிய ஷாப்பிங் பைகளுடன் (டிபன்களுடன்) காணப்படுவார்கள். கிண்டி பல IT பணியாளர்கள் பணி செய்யும் DLF IT பார்க்கின் மிக அருகாமையில் இருக்கின்ற இரயில் நிலையமாகும், எனவே சில நவீனமான தொழில்முறையாளர்கள் அவர்களின் தோள்பட்டையைச் சுற்றி லேப்டாப் (மடிக்கணினி) பைகளுடனும் இந்த நிலையத்தில் இறங்குகிறார்கள்.
மீனம்பாக்கம் : ஏன் இங்கு நிலையம் உள்ளது என்று யாருக்கும் உண்மையில் தெரியாது. விமான நிலையம் அருகில் தான் உள்ளது ஆனால் விமானநிலையத்திற்கான நிலையம் இது அல்ல. சுற்றி நிறைய குடியிருப்பு இடங்கள் அல்லது அலுவலகங்கள் இல்லை. அருகிலுள்ளஸ ஜெயின் கல்லூரியின் மாணவர்கள் தான் இந்த நிலையத்தின் முக்கியமான பயனாளிகள், குறிப்பாக தனி இடத்தை விரும்பும் காதல் பறவைகளுக்கும் பயனளிக்கும் இடமாக உள்ளது.
திரிசூலம்: இது சென்னை விமான நிலையத்தை இணைக்கும் நிலையமாகும். இங்கே தான் அவர்களின் மதிப்பை காட்டுவதற்காக அகற்றப்படாமல் சமான்களில் இருக்கும் நிறைய ஏர்லைன் டேக்குகளைப் பார்க்கலாம். இங்கே திடீரென்று சென்னையின் உண்மையான நிலைக்கு அழைத்து வரப்பட்ட சில ஜெட் லேகேட்(வெவ்வேறு நேர மண்டலங்கள் முழுவதும் நீண்ட நேரம் விமானத்தில் பயணித்தவர்கள்) பயணிகளைப் பார்க்கலாம்.
பல்லாவரம்: மீண்டும் குடியிருப்பு பகுதி. ஆச்சரியமாக, இரயிலில் இருக்கும் 70% கூட்டம் பல்லாவரத்தில் இறங்குகிறார்கள். எனவே, நீங்கள் இருக்கைக்காக காத்திருக்கிறீர்கள் என்றால், இங்கே தான் நீங்கள் காலியான இடத்தை கண்டுபிடிக்க போதுமான அளவு விழிப்புணர்வுடன் இருக்க வேண்டும்.
குரோம்பேட்டை மற்றும் தாம்பரம் சானிட்டோரியம்: இவைகள் விரிவாக்கப்பட்ட சென்னையின் வளர்ந்து வரும் ஷாப்பிங் இடங்களாகும். இந்த நிலையங்கள் நகரத்தின் கடினமான நிலையிலிருந்து வெளியே இருக்கும் முக்கியமான குடியிருப்பு பகுதிகளின் மையமாகும் மேலும் பொதுவாக இந்த நிலையங்களில் நாளின் சோர்வான பணிக்குப் பின் அதிக அளவில் வீடுகளுக்கு திரும்புபவர்களை காணலாம்.
தாம்பரம்: இது பிரபலமான உள்ளூர் இரயில் பாதையின் முடிவாகும் மேலும் தற்போது சென்னை ரியல் எஸ்டேட் இடத்தின் விரிவடையும் ஆரம்ப இடமாக உள்ளது. நிறைய வீடமைப்பு மற்றும் வளர்ச்சி திட்டங்கள் தாம்பரம் மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் மையமாக உள்ளன. எனவே, பல கட்டுமான நிறுவனங்களின் பணியாளர்கள் இந்த நிலையத்தில் தான் இறங்க வேண்டும்.