சார் தாம் யாத்திரை பற்றி நீங்கள் தெரிந்து கொள்ள வேண்டிய அனைத்து விஷயங்கள்

1
3953
Tamil blog

வாழ்நாளில் ஒரு முறை பயணிக்கக்கூடிய யாத்திரை, சார் தாம் நீண்டது, கடினமானது மற்றும் சமமான அளவில் வெகுமதியளிக்கும் யாத்திரை. ஹரித்வாரை நெருக்கமான இரயில் நிலையமாக கொண்டு, மக்கள் யமுனோத்ரிக்கு செல்கிறார்கள் அங்கே யமுனை நிதியில் முழ்கிய புனிதத்துடன் அனைத்து நடவடிக்கைகளும் தொடங்குகின்றன. இங்கே இருந்து யாத்ரீகள் கங்கோத்ரிக்கு சென்று, பின் கேதார்நாத் மேலும் இறுதியாக பத்ரிநாத்திற்கு செல்கிறார்கள். அனைத்தும் நீண்ட பாதையாகும், பல்வேறு பழமையான கோவில்களில் பூஜை செய்கிறார்கள் மனதை மயக்குகின்ற அழகு வரை அவர்கள் மலையேறுவதுடன் அவர்களே அவர்களை சுத்தப்படுத்திக் கொள்கிறார்கள்.

தாம் 1: கங்கோத்ரி

உத்தர்காசி மாவட்டத்தில் அமைந்துள்ள, கங்கோத்ரியின் நிலப்பரப்புகள் பாய்ந்து ஓடுகின்ற நன்னீர் நீரோடைகளாலும் சுற்றுமுற்றும் தழைத்த பசுமையான செடிகொடிகளாலும் அலங்கரிக்கப்பட்டுள்ளன. இந்து புராணங்களின் படி, இது தான் நதி கங்கை ஆரம்பிக்கும் இடமாகும். கங்கோத்ரியிலிருந்து தண்ணீர் பத்ரிநாத் மற்றும் கேதார்நாத்திற்கு செல்கிறது, அவைகள் சார் தாம் பயணத்தில் அடுத்த நிறுத்தங்களாகும். இங்கே நீங்கள் கங்கோத்ரி கோவில், கங்க்னானி – குணப்படுத்தும் தன்மைகளுடன் சூடான சல்பர் நீருற்று, மற்ற மத தளங்களின் மத்தியில், இந்த மரண பூமிக்கு முதலில் தேவி கங்கை வந்த இடத்தில் மூழ்கியிருக்கும் சிவ லிங்கத்தைப் பார்ப்பீர்கள்.

தாம் 1: யமுனோத்ரி

இந்தப் புனிதமான நகரம் யமுனா தேவிக்கு அர்ப்பணிக்கப்பட்டுள்ளது. இங்கே உள்ள காளிண்டி மலைகளிலுள்ள ஒரு இடத்திலிருந்து தான் யமுனா நதி உருவாகிறது என்று நம்பப்படுகிறது. யமுனோத்ரியை அடைவதற்கு, யாத்ரீகள் ஜான்கிசட்டிலிருந்து குறுகிய மலையேற வேண்டும். எனினும், பல்லக்கில் பயணிப்பது மூலம் அல்லது மட்டக்குதிரையில் சவாரி செய்வதன் மூலம் ஒருவர் நடப்பதை தவிர்க்கலாம். இந்த இரண்டு வசதிகளின் விலை ரூபாய் 500-1200 வரையிலான வரம்பில் உள்ளது. இங்குள்ள கோவில்களைத் தரிசிப்பதுடன், நீங்கள் சூரிய குந்த், சப்தரிஷி குந்த் மற்றும் மலையேற்றத்தின் மையமான ஜான்கிசட்டியைப் பார்க்கலாம்.

தாம் 3: கேதார்நாத்

குப்தகாசியில், ருத்ரபிரயாக்கிலிருந்து 86 கிலோ மீட்டர் தூரத்தில், கேதார்நாத் அமைந்துள்ளது. இதை அழகான மலைப் பாதைகள், புல்வெளிகள், வெப்பமான நிரூற்றுகள், நம்பமுடியாத மலைச் சிகரங்கள் மற்றும் தழைத்த பசுமையான செடிகொடிகளின் வழியாக பயணிப்பதன் மூலம் அடையலாம். இறைவன் சிவனின் 12 ஜோதிர்லிங்கங்களில், இது மிகவும் குறிப்பிடத்தக்கது. கேதார்நாத்தில், நீங்கள் பைரவர் கோவிலையும் சொர்க்கத்திற்கானநுழைவாயில் என்று நம்பப்படும் சட்டோபன்த் உச்சி – மஹாபன் என்பதையும் காணலாம். அதனுடைய நிறைவான தாவரங்கள் மற்றும் விலங்கினங்களுக்காக அறியப்பட்ட கேதார்நாத் வனவிலங்கு சரணாலயமும் உள்ளது.

கேதார்நாத் செல்வதற்காக பதிவு செய்தல்: கேதார்நாத் பயணத்திற்கு முன்னதாக பதிவு செய்தல் அவசியம். பதிவுகள் இயற்பியலான பதிவு கவுண்டர்கள் அல்லது ஆன்லைன் மூலம் செய்யப்படலாம். உங்களுக்கு பயணம் முழுவதும் எடுத்துச்செல்ல வேண்டிய பயண அட்டை வழங்கப்படும்.

மருத்துவச் சான்றிதழ்: குப்தகாசி அல்லது சோன்பிரயாக்கிலுள்ள மருத்துவ மையங்களிலிருந்து மருத்துவ உடலுறுதி சான்றிதழைப் பெற்ற பின் மட்டுமே இந்தப் பயணத்தை நீங்கள் மேற்கொள்ளலாம். மருத்துவ அறிக்கைகள் ஏதாவது நெருக்கடியாக உள்ளது என்று பரிந்துரைத்தால் நீங்கள் மலையேறுவதற்கு அனுமதிக்கப்பட மாட்டீர்கள், எனினும் நீங்கள் ஹெலிகாப்டர் மூலம் கேதார்நாத்தை அடையலாம்.

தாம் 4: பத்ரிநாத்

கர்வால் இமயமலையின் நடுவே அமைந்துள்ள, இந்தப் புனிதமான நகரத்தைப் பார்ப்பதற்கு சிறப்பு அனுமதி தேவை. இந்த கோவிலை அடைவதற்கு நீங்கள் ஜோஷிமாத்திலிருந்து காரை வாடகைக்கு எடுத்துக்கொள்ளலாம், ஆனால் அனைத்து கார்களும் பத்ரிநாத்திற்கு குறிப்பிட்ட நிலையான நேரங்களில் (6-7 AM, 9-10 AM, 11-12 AM, 2-3 PM and 4:30-5:30 PM) மட்டுமே அனுமதிக்கப்படும். எனினும், வரிசையில் காத்திருப்பதில் சோர்வடைந்து விரைவாக தரிசனம் செய்ய வேண்டும் என்று நீங்கள் விரும்பினால், நுழைவாயில் எண்.3 அருகே இருக்கும் டிக்கெட் கவுண்டருக்கு சென்று வேத் பத் பூஜாவிற்கான சீட்டை வாங்கவும். இதனுடைய விலை ஒரு நபருக்கு ரூபாய்.2500 மேலும் 15 நிமிடங்களுக்குள் தரிசிக்க முடியும். இறுதியாக, கோவிலின் நுழைவாயில் ஏப்ரல் முதல் மே வரை திறந்திருக்கும் மற்றும் நவம்பர் முதல் மூடப்படுகிறது.

சார் தாம் யாத்திரையில் கட்டாயமாக பங்கேற்க வேண்டும் மேலும் சரியான பயணத்திற்கான அனைத்து கூறுகளும் இதில் உள்ளது. பயணம் முழுவதும் சாகசமான, மத உணர்வுடன், இயற்கை காட்சிகளைப் பார்ப்பதுடன் தனித்துவமான அனுபவங்களை நீங்கள் அனுபவிக்கலாம்.

1 COMMENT

  1. Thanks for this very interesting and wonderful post.
    இந்தப் பகுதிகளுக்கு நேரடியாக பயணித்த அனுபவம் எங்களுக்கு கிடைத்தது
    தொடர்ந்தும் இது போன்ற அழகான மனதிற்கு ரம்மியமாக பதிவுகளை இட எனது வாழ்த்துக்கள்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here