இந்தியாவில் இருக்கும் கடற்கரைகள் மணல் மற்றும் கடலின் இணைப்பை மட்டுமே குறிப்பது இல்லை. சில நேரங்களில், இது கும்பலான சாட், பொம்மைகள் மற்றும் கரும்புச் சாறு விற்பனையாளர்களைக் குறிக்கிறது. மற்ற நேரங்களில், கடற்கரை என்றால் தெளிவான தண்ணீர் மற்றும் பனை மரங்கள், அதே சமயத்தில் மற்றவர்களுக்கு சாகசமான தண்ணீர் விளையாட்டுகளைக் குறிக்கிறது. ஆனால் நீங்கள் பழங்காலப் பண்புகெடாத இடத்தை தேடுகிறீர்கள் என்றால், டாமன் மற்றும் டையூ கடற்கரைகள் உங்களுக்கான இடங்களாகும்.
டாமனின் சிறந்த கடற்கரைகள்
தேவ்கா கடற்கரை
மிக நீண்ட கடலோரத்தை கொண்டுள்ள, இந்த டாமன் கடற்கரை குடும்ப வேடிக்கைகளுக்கு ஹாட்ஸ்பாட் ஆகும். தேவ்கா கடற்கரையில் சில பாறைப்பொதிவுகள் உள்ளன, எனவே நீச்சலடித்தல் ஒவ்வொரு பகுதியிலும் அனுமதிக்கப்படுவதில்லை. இங்கே இருக்கும் கேளிக்கைப் பூங்கா பொழுதுபோக்கை அதிகரித்து குழந்தைகள் மத்தியில் பெரும் வரவேற்பை பெறுகிறது. கடல் காட்சியோடு காபியை உறிஞ்சுதல் அல்லது சூடாக வறுத்த மீனைத் தட்டில் வைத்துக்கொண்டு மெல்லுவதுடன், தேவ்கா கடற்கரை வேடிக்கை நிறைந்த உல்லாசப் பயணத்தை வழங்குகிறது.
மிகச் சிறிய கருத்து: இந்த கடற்கரை தங்கமான மணல் இல்லாமல், மாறாக கருப்பு மண்ணால் நிரம்பியுள்ளது
ஜம்போர் கடற்கரை
தேவ்கா கடற்கரைக்கு முரணாக, ஜம்போர் கடற்கரைக்கு அதற்கு சொந்தமான கவர்ச்சி உள்ளது. டாமனின் தென் முனையில் அமைந்துள்ள, இந்த டாமன் கடற்கரை அமைதியை விரும்புபவர்களுக்கான இடமாக உள்ளது. இங்கே, உங்கள் கவனத்தை ஈர்க்கும் கேளிக்கைப் பூங்காக்கள் அல்லது மிகவும் நெருக்கமாக–அமைந்துள்ள உணவு கடைகள் எதுவும் இல்லை. முரணாக உங்களுக்கு ஓய்வெடுக்க வேண்டும், அரேபியனின் குளிர்ச்சியான தண்ணீரில் நீச்சலடிக்க வேண்டும் அல்லது சவுக்கு மரங்களின் தோட்டத்தின் நிழலில் உட்கார வேண்டும் என்றால், ஜம்போர் கடற்கரை உங்கள் ரகமாகும்.
குறிப்பு: கடற்கரை அற்புதமான சூரிய அஸ்தமன காட்சிகளை வழங்குகிறது, உங்கள் பயணத்தை அதற்கேற்ப திட்டமிடவும்.
டையூவின் சிறந்த கடற்கரைகள்
நாகோன் கடற்கரை
இந்த சிறிய மீன் பிடிக்கும் கிராமம் அற்புதமான டையூ கடற்கரை அனுபவத்தை வழங்குகிறது. குதிரை வடிவிலான நாகோ கடற்கரை சுற்றுலா பயணிகளைக் கவர்ந்திழுக்கும் முக்கியமான இடமாகும் மற்றும் வாழைப்பழ படகு சவாரி, பாராசைலிங், ஜெட் சறுக்குதல் மற்றும் கடல்சருக்கல் என அதிகமான அளவில் அனுபவிக்கும் சுற்றுலா பயணிகளுக்காக பல்வேறு வாய்ப்புகளை வழங்குகிறது. புள்ளிகள் போலச் சிதறலான தேங்காய் மற்றும் சோள விற்பனையாளர்களுடன், நாகோ கடற்கரை டையூவில் பார்ப்பதற்கான மிகவும் பிரபலமான இடமாகும்.
மிகச் சிறிய கருத்து: நாகோ என்றால் “புதிய கோவா”. காலனித்துவ ஆட்சியின் போது பல கொங்கனி குடும்பங்கள் இந்த கடற்கரையின் அருகில் குடியேறினார்கள்.
சக்ரதீர்த் கடற்கரை
கிட்டத்தட்ட டையூவின் மத்தியில் அமைந்துள்ள, சக்ரதீர்த் கடற்கரை தனிமையை விரும்புபவர்களுக்கான இடமாகும். கடலோரமாக பரவியிருக்கும் பாறைகளுடன், அதனுடைய அமைப்பில் சற்றே வித்தியாசமான இந்த டையூ கடற்கரை நேர்த்தியான புகைப்பட தருணங்களுக்கான அற்புதமான அமைப்புகளைக் கொண்டுள்ளது. கடற்கரையில் அமைந்துள்ள சன்செட் பாயின்ட் (சூரிய அஸ்தமனப் பகுதி) சூரிய அஸ்தமனத்தை நீங்கள் தவறவிட விரும்ப மாட்டீர்கள் என்பதை சொல்லாமலேயே சொல்லுகிறது.
மிகச் சிறிய கருத்து: சக்ரதீர்த் கடற்கரையின் அருகிலுள்ள கிருஷணன் கோயிலின் மதிப்பில் பெயரிடப்பட்டது. கோயிலுக்கு பல்வேறு புராணக் கதைகளின் தொடர்புகளும் உள்ளன.
கோக்ஹலா கடற்கரை
டையூவிலிருந்து சுமார் 15 கி.மீ. தொலைவிலுள்ள, கோக்ஹலா கடற்கரை ஓய்வெடுக்கும் அனுபவத்தை வழங்குகின்ற பார்க்க வேண்டிய இடங்களில் மற்றொரு இடமாக உள்ளது. பிரபலமான நாகோ கடற்கரை போன்று கூட்டமாக இல்லாமல், நீங்கள் இங்கேயும் சில தண்ணீர் விளையாட்டு நடவடிக்கைகளில் ஈடுபடலாம். கோக்ஹலா கடற்கரை உங்கள் நீச்சலுடையை அணிந்து கொள்ளவும் கொஞ்ச நேரம் குழந்தைகளுடன் அனுபவிப்பதற்கும் சிறந்த இடமாகும். மேலும் என்னவென்று யூகிக்கவும், உங்களுக்கு அதிர்ஷ்டமிருந்தால் நீங்கள் சில டால்பின்களையும் காணலாம்.
மிகச் சிறிய கருத்து: கடற்கரை திருமணத்திற்கு–முன் புகைப்படம் எடுப்பதற்கான சிறந்த இடமாக மாறிவிட்டது.
ஜலந்தர் கடற்கரை
வரிசையான பனை மரங்களுடன், ஜலந்தர் கடற்கரை, கிட்டத்தட்ட கடற்கரைகள் குறித்து வரையப்பட்டுள்ள படங்களின் உண்மையான வாழ்க்கையின் பிரதிபலிப்பாகும். கூட்டமே இல்லாமல், அமைதியாக மற்றும் பழங்காலப் பண்பு கெடாமல், இலைமயமான நிழல் படத்தின் வழியாக அடிவானத்தைப் பார்ப்பதை விட மகிழ்ச்சியானது வேறு எதுவும் இல்லை.
மிகச் சிறிய கருத்து: ஜலந்தர் என்ற புராணக்கதைகளின் அரக்கனுக்கு அர்ப்பணிக்கப்பட்டுள்ள ஆலயம் அருகில் இருப்பதால் இந்த கடற்கரைக்கு இந்தப் பெயரிடப்பட்டுள்ளது. அரக்கன் கடவுள் கிருஷணனால் கொல்லப்படுகிறான்.
எனவே, நீங்கள் புத்துணர்ச்சியான, உப்பான, டாமன் மற்றும் டையூ கடற்கரையின் காற்றை சுவாசிக்க விரும்புகிறீர்களா?