படங்கள் எடுக்கப்படவில்லை எனில், பயணங்கள் முழுமையற்றதாகத் திகழும். வாழ்நாள் முழுவதும் நினைவுகளை தக்கவைக்க இது சிறந்த வழிமுறையாகும். டிஎஸ்எல்அர் இல்லை? கவலைபட வேண்டாம்! கீழ்காணும் குறிப்புகளை பயன்படுத்தினால், உங்கள் ஸ்மார்ட்ஃபோன் கேமராவிலும் நீங்கள் அற்புதங்களை நிகழ்த்தலாம்:
சரியான நேரத்திற்காக தயாராக இருங்கள்: உங்கள் மொபைல் கேராவை ஹோம் ஸ்கிரீனில் வைத்திருக்கவும். எனெனில், நல்ல நேர்வை தவறவிடுவது மிகவும் சுலபமாகும். உங்கள் பவர்-பேங்கை கையோடு வைத்திருக்கவும் மற்றும் ஃபோனின் பேட்டரியை அவ்வப்போது சரிபார்க்கவும். இதனால் சில முக்கிய படங்களை படம்பிடிக்கும் வாய்ப்பினை நீங்கள் எப்போதும் தவறவிடமாட்டீர்கள்.
ஃபோட்டோ எடிட்டிங் அப்ளிகேஷன்கள்: ஃபோட்டோஷாப், ஸ்நாப்சீட், லைன் கேமரா, கேமரா 360 மற்றும் ரெட்ரிகா போன்ற அப்ளிகேஷன்களை பயன்படுத்தி, உங்கள் புகைப்படங்களுக்கு மேலும் அழகூட்டுங்கள்
தனித்துவமிக்க கோணங்களை தேர்ந்தெடுங்கள்: வித்தியாசமான கோணங்கள் மற்றும் ஃபிரேம்களை பயன்பத்தி வேறுபட்ட முறையில் புகைப்படங்களை எடுங்கள். நீங்கள் பல்வேறு வண்ண ஃபில்டர்களையும் தேர்ந்தெடுக்கலாம்.
உங்கள் ஸ்மார்ட்ஃபோனில் கூடுதல் லென்ஸ்களை சேர்க்கவும்: கூடுதல் லென்ஸ் எவ்வாறு சிறந்த புகைப்படங்கள் எடுப்பதற்கு உதவும்? உங்கள் ஃபோனுக்கு அது ஒரு கூடுதல் கண்ணாடி போன்ற. இது தெளிவுதன்மைக்கு உதவி, படம் இன்னும் அதிக நிஜம் போன்ற தோற்றத்தைக் கொண்டிருக்க உதவும்
அனைத்திற்கும் மேலாக…
பயணம் செய்யுங்கள், கண்டறியுங்கள் மற்றும் உங்கள் நினைவுகள் பாதுகாத்திடுங்கள்!