ஏ.சி. முதல் வகுப்பு பயணிகள் இலவசமாக 70 கிலோ சமான்களையும் மற்றும் பார்சல் அலுவலகத்தில் கூடுதல் எடைக்காக பணம் செலுத்துவதன் மூலம்அதிகபட்சம் 150 கிலோ வரையிலும் எடுத்துச்செல்லலாம்.
ஏ.சி. இரண்டு அடுக்கு பயணிகளுக்கு இலவசமாக 50 கிலோ சமான்கள் அனுமதிக்கப்படுகிறது மற்றும் அவர்கள் நிலையத்தின் சாமான்/பார்சல் அலுவலகத்தில் கூடுதல் எடைக்காக பணம் செலுத்துவதன் மூலம் அதிகபட்சம் 100 கிலோ வரையில் எடுத்துச்செல்லலாம்.
ஏ.சி. III அல்லது ஏ.சி. சேர் காரில் பயணிக்கும் பயணிகள் இலவசமாக 40 கிலோ சாமான்களை எடுத்துச்செல்லலாம் மேலும் அதிகபட்சம் 40 கிலோ.
ஸ்லீப்பர் வகுப்பு பயணிகளுக்கு இலவசமாக 40 கிலோ சாமான்கள் அனுமதிக்கப்படுகிறது மற்றும் அதிப்படியாக இருப்பவைகளுக்காக பணம் செலுத்திய பின் அதிகபட்சம் 80 கிலோ எடுத்துச்செல்லலாம்.
இரண்டாம் வகுப்பில் இருக்கும் பயணிகளுக்கு இலவசமாக 35 கிலோ சாமான்கள் அனுமதிக்கப்படுகிறது.அவர்கள் சாமான்/பார்சல் அலுவலகத்தில் அதிகப்படியாக இருப்பவைகளுக்காக பணம் செலுத்துவதன் மூலம் அதிகபட்சம் 70 கிலோ வரையில் எடுத்துச்செல்லலாம்.
5 முதல் 12 வயதிற்குட்பட்ட குழந்தைகளுக்கு அவர்களின் குறிப்பிட்ட வகுப்பிற்காக இலவச சாமான் சலுகையில் பாதி மட்டுமே அனுமதிக்கப்படும். அத்தகைய நிகழ்வுகளில் இலவச சலுகைகள் 50 கிலோவை தாண்டக்கூடாது.
நீங்கள் எடுத்துச்செல்லும் டிரங்குகள், சூட்கேஸ்கள் அல்லது பெட்டிகள் பரிந்துரைக்கப்பட்ட அளவு: 100 செ.மீ. x 60 செ.மீ. x 25 செ.மீ.-க்குள் இருக்க வேண்டும்.இதை தாண்டும் சாமான்கள் சாமான் வண்டிக்கு அனுப்பப்படும்.
கூடுதல் சாமான்களுக்கு எப்படி பதிவு செய்வது?
நீங்கள் ஏறும் இரயில் நிலையத்திற்கு முன்னதாகவே சென்று பார்சல் அலுவலகத்தில் சாமான்கள் பற்றி விசாரிக்கவும். புறப்படுவதற்கு குறைந்தபட்சம் 30 நிமிடங்களுக்கு முன் அதிகப்படியான சாமான்களுக்காக பதிவு செய்ய வேண்டும்.
கூடுதல் பேக்கேஜிற்கான அறிவிப்பு படிவத்தைப் பூர்த்தி செய்து அதன் எடையை சரிபார்க்கவும்.
கட்டண வித்தியாசத்தை செலுத்தி சீட்டு பெற்றுக்கொள்ளவும்.
இந்த சீட்டை தேவைப்படும் போதுTTE-யிடம்காண்பிக்க வேண்டும்.
ஒரு முறை பதிவு செய்துவிட்டால், கூடுதல் சாமான்கள் பிரேக் வண்டிக்கு அனுப்பப்படும்.
கூடுதல் சாமான் பதிவுகளுக்காக குறைந்தபட்ச கட்டணங்கள் ரூபாய் 30 முதல் தொடங்குகிறது.
இந்திய இரயில்களில் அனுமதிக்கப்படாத சாமான் வகை?
அமிலம் அல்லது எரியக்கூடிய வாயு இருக்கும் எந்தப் பொருட்களும்.
அனுமதிக்கப்பட்டால், ஆக்சிஜன் சிலிண்டர் அதனுடைய நிலைப்பாட்டுடன், இலவச சாமான சலுகையின் பகுதியாக இருக்கும். மருத்துவச் சான்றிதழ் வழங்கப்பட வேண்டும்.
விற்பனைப் பொருட்கள் எதுவும் அனுமதிக்கப்பட மாட்டாது. சாமான் வண்டியில் எடுத்துச்செல்வதற்காக சிறப்பாக பதிவு செய்ய வேண்டும்.
தாக்குதலான அல்லது தீங்கு ஏற்படுத்தக்கூடிய பொருட்கள் எதுவும் கிடையாது.
பறவைகள், மீன்கள், நாய்கள் அல்லது பூனைகள் எதுவும் அனுமதிக்கப்பட மாட்டாது. நீங்கள் அவைகளுக்காக பார்சல் அலுவலகத்தில் பதிவு செய்ய வேண்டும் அல்லது முழு ஏ.சி. முதல் வகுப்பு கூபேவை பதிவு செய்ய வேண்டும்.