டேனிஷ் நகரம் டிரான்க்யூபார் பற்றிய கண்ணோட்டம்

0
2677
Tamil travel blog

கடலோர தமிழ்நாட்டில் ஒரு காலத்தில் டேனிஷர்களால் ஆளப்பட்ட சிறிய நகரம் இருப்பது உங்களுக்குத் தெரியுமா! இன்று தரங்கம்பாடி என மறுபெயரிடப்பட்டுள்ள, முன்னாள் டிரான்க்யூபார், 150 ஆண்டுகளுக்கு டேனிஷ் பிரதேசமாக இருந்தது!16 ஆம் நூற்றாண்டின் ஆரம்பத்தில், தென்னிந்திய மாநிலங்கள் மற்றும் இன்றைய இலங்கையுடன் டேனிஷர்களுக்கு வலுவான வர்த்தக தொடர்பு இருந்தது. எனினும், இந்த வளர்ந்த வந்த வர்த்தகம் மற்ற காலனித்துவ சக்திகளால் தடுக்கப்பட்டது. அவர்களின் வர்த்தகத்தை ஒருங்கிணைப்பதற்காக, டேனிஷ் ஜெனரல் ஓவ் ஜிஜேடே அவர்கள் கடலோர நகரத்தில் டேனிஷ் குடியேற்றங்களை அமைப்பதற்கு தஞ்சாவூர் நாயக்கின் இராஜ்ஜியத்தை அணுகினார். மன்னர் ஒப்புக்கொண்டவுடன் டேனிஷர்கள் வீடுகளை விட்டுடிரான்க்யூபாரை அவர்களின் வீடாக மாற்றினார்கள். இந்த கிளர்ச்சியில்லாத சிறிய மீன்பிடிக்கும் கிராமம் இந்தியாவில் டேனிஷ் அனுபவத்தை பயணிகளுக்கு வழங்குவதுடன், இன்று தமிழ்நாட்டின் சுற்றுலா இடமாக மாறிவருகிறது.

டிரான்க்யூபாரில் பார்க்க வேண்டிய இடங்கள்

Tamil travel blog

   டிரான்க்யூபார் நகரத்தின் நுழைவாயில்

டிரான்க்யூபார் நகரம் தரங்கம்பாடியின் முக்கியமான தெரு, கிங்ஸ் சாலையில் அமைந்துள்ளது. உள்ளூர் வாசிகள் இந்த வாயிலை “டிரான்க்யூபாருக்கான நுழைவாயில்” என்று குறிப்பிடுகிறார்கள் மேலும் கடந்த ஆண்டுகளில் நகரத்திற்கு இது தான் முக்கியமான நுழைவாயிலாக இருந்தது. பிரதான நுழைவாயில் டேனிஷ் ஆட்சியாளர்களால் கட்டப்பட்டது, ஆனால் இது பின்னர் அழிக்கப்பட்டது. நவீன காலத்தின் நுழைவாயில் டேனிஷர்களின் கட்டிடக்கலை பாணியில் அமைக்கப்பட்டுள்ளது. வெள்ளை நுழைவாயிலின் மேலே “அன்னோ 1792” என்று கல்வெட்டுப் பொறிக்கப்பட்டுள்ளது அதாவது ‘1792-ல் கட்டப்பட்ட நுழைவாயில்’ என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

கோட்டை டான்ஸ்போர்க்

இங்கு தான் டிரான்க்யூபாரில் டேனிஷ் ஆட்சி தொடங்கியது. கோட்டை டான்ஸ்போர்க் அல்லது 1620-ல் கட்டப்பட்ட “டேனிஷ் கோட்டை” என்று உள்ளூர் வாசிகள் குறிப்பிடுகிறார்கள். கோட்டை அதிர்ச்சியூட்டும் பெருங்கடல் காட்சிகளுடன் வங்களா விரிகுடாவின் கரையோரத்தில் அமைந்துள்ளது. கோட்டையில் தூண்களான கட்டமைப்புகள் மற்றும் உயர்வான கூரைகளுடன் தனித்துவமான கட்டிடக்கலை வடிவமைப்பு உள்ளது. கோட்டையில் இரண்டு மாடிகள் உள்ளன, ஆனால் கோட்டை டான்ஸ்போர்க்கின் பெரும்பாலான அறைகள் பூட்டி வைக்கப்பட்டுள்ளன. இன்று கூட, கடலை நோக்கி ஒரு பீரங்கி இருப்பதை கண்டறியலாம்!டிரான்க்யூபாரில் டேனிஷ் ஆட்சியின் யூகத்தை அனுபவிப்பதற்கு இந்த கோட்டையை கண்டிப்பாக பார்க்க வேண்டும். இங்கே இருக்கும் போது, டிரான்க்யூபாரின் டேனிஷ் வரலாற்றிலிருந்து பல தொல்பொருட்கள் இருக்கும் டேனிஷ் அருங்காட்சியகத்தையும் பார்க்கவும்.

புதிய ஜெருசலம் தேவாலயம்

கிங்ஸ் சாலையில் அமைந்துள்ள புதிய ஜெருசலம் தேவாலயம் கட்டிடக்கலையின் கம்பீரமான பகுதியாகும். ஜெருசலம் தேவாலயம் என்ற பெயர் கொண்ட ஆரம்பகால தேவாலய கட்டிடம்,டேனிஷ் மிஷினரியால் 1707-ல் கட்டப்பட்டது.ஆனால் 1715-ல் கடுமையான சுனாமியால் தேவாலய கட்டிடம் அழிந்துவிட்டது.அதன் விளைவாக புதிய ஜெருசலம் தேவாலயம் பெரிய இடவசதிகள் மற்றும் பெரும் கட்டிடக்கலையுடன் கட்டப்பட்டது. இந்த வெள்ளை கட்டிடத்தில் டேனிஷ் மற்றும் இந்திய கட்டிடக்கலையின் சுவாரஸ்யமான கலவை உள்ளது.

டிரான்க்யூபார் கடல்சார்ந்த அருங்காட்சியகம்

டேனிஷர்கள் கடல் வழி வல்லுனர்கள் என்று அறியப்பட்டார்கள், மேலும் இந்த அருங்காட்சியகம் பழைய டேனிஷ் படகுகள், மீன்பிடி படகுகள் முதல் டிரான்க்யூபாரின் பழைய வரைபடங்கள் போன்று அவர்களின் சில கருவிகளை வெளிப்படுத்துகிறது. கடல்சார்ந்த வரலாற்று பற்றிய புத்தகங்களின் மிகப் பெரிய தொகுப்பை தவிர, டிரான்க்யூபாரில் 2004 சுனாமியின் விளைவுகளைப் பிரதிபலித்துக்காட்டும் சிறப்பு புகைப்பட-வீடியோ காட்சியும் டிரான்க்யூபார் கடல்சார்ந்த அருங்காட்சியகத்தில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. அருங்காட்சியகத்தின் நுழைவு கட்டணம் இந்தியர்களுக்கு ரூபாய்.5.

டிரான்க்யூபார் கடற்கரை

இந்தியாவில் காதலர்களுக்கு ஏற்ற கடற்கரையில் இதுவும் ஒன்று, இந்த கடற்கரையில் சாவகாசமாக உங்கள் வாழ்க்கைத்துணையின் கைகளைப் பிடித்துக்கொண்டு நடந்து செல்ல வேண்டும் என்று நீங்கள் விரும்புவீர்கள். கடற்கரை முடிந்தவரையில் சுத்தமாகவும் சவுக்கு மரங்களாலும் அலங்கரிக்கப்பட்டுள்ளது. இது வங்களா விரிகுடாவின் கவர்ச்சியூட்டும் காட்சிகளை வழங்குகிறது. டிரான்க்யூபார் கடற்கரையின் நட்சத்திர கவர்ச்சிகளில் ஒன்று என்னவென்றால் பழைய டேனிஷ் பிரபுக்களின் மாளிகை இது இப்போது ஹேரிடேஜ் ஹோட்டலாக மாற்றப்பட்டுள்ளது.

டிரான்க்யூபார் அல்லது தரங்கம்பாடி நீங்கள் எப்படி அழைத்தாலும்,இது இந்திய வரலாற்றின் தனித்துவமான பகுதிகளின் நினைவுகளைப் பாதுகாக்கிறது. சென்னை மக்கள் கூட்டத்திலிருந்து தள்ளி பாண்டிச்சேரியிலிருந்து குறுகிய தூரத்தில், தரங்கம்பாடி தமிழ்நாடு சுற்றுலா கவர்ச்சிகளில் தவிர்க்க முடியாத ஒன்றாகும்.