மழைக்காலத்தில் பயணிப்பது கடினமாக இருக்கலாம் ஆனால் அதை நீங்கள் சாகசமாகவும் மாற்றலாம்! இது இயற்கையின் அழகையை ஒவ்வொரு துளியும் அனுபவிப்பதற்கான சிறந்த நேரமாகும். கன மழை பூமியை சுத்தம் செய்கிறது, குளிர்ந்து காற்று மேகங்களை உங்களின் அருகில் கொண்டு வந்து இந்தியாவின் அற்புதமான பக்கத்தை வெளிப்படுத்துகிறது. மழைக்காலம் வெப்பநிலையை கீழே கொண்டு வருவது மட்டுமல்லாமல்; ஹோட்டல்களின் கட்டணங்களையும் குறைக்கிறது, இந்தியாவை சிறந்த ஆஃப்-சீசன் இடமாக மாற்றுகிறது. எனவே உங்களுடைய பைகளைப் பேக் செய்து இந்த மழைக்காலத்தில் பயணிக்கவும்.
பாதையிலேயே அழகு
பொருத்தமற்ற போக்குவரத்து சலித்துவிட்டதா? இரயில் டிக்கெட் பதிவு செய்து அதில் உட்காரவும். இரயிலில் பயணிக்கும் போது இந்தியாவின் உண்மையான அழகை சிறப்பாக பார்க்கலாம். உங்களுடைய விருப்பமான இடத்திற்கு இரயிலில் பயணம் செய்தல் நிச்சயமாக உங்களுக்கு அற்புதமான மழைக்கால அனுபவத்தை கொடுக்கும்.
ஜங்கிள் கவர்
வனத்தின் அழகை சுற்றிப்பார்ப்பதற்கான சிறந்த நேரம் மழைக்காலம். நீங்கள் பறவைகளைப் பார்த்துக் கொண்டு மரத்தின் மேல் அமைந்திருக்கும் வீடுகளில் நேரத்தை செலவிடலாம் அல்லது ஈரமான வனத்தின் வழியாக நடந்து செல்லலாம்.
ஆயுர்வேத சிகிச்சை
பொங்கி வழிகிற கடற்கழிகள், பரந்த தோப்புகள், செங்குத்தான பாறைகள் மேலும் பல மிக அழகான காட்சிகள், இந்தியாவில் மிகச் சிறந்த மழைக்கால இடங்களில் ஒன்றாக கேரளாவை மாற்றுகிறது. கேரளாவில் இருக்கும் போது, கேரளாவின் ஆயுர்வேத மையங்களில் மசாஜ் செய்து கொண்டு மூலிகைகள் மற்றும் எண்ணெய்கள் உங்களுடைய செல்களிலிருந்து நச்சுத்தன்மையை நீக்க அனுமதிக்கவும். கேரளாவில் பல ஹோட்டல்கள் ஆயுர்வேத மசாஜ் வழங்குகின்றன, எனவே பதிவு செய்வதற்கு முன் சரிபார்க்கவும்.
அலையாக விழும் நீர்வீழ்ச்சிகள்
மழை மலைகளிலிருந்து ஜொலிக்கும் நீர்வீழ்ச்சிகளை நேரடியாக கொண்டு வருகிறது. ஆண்டின் இந்த காலத்தில் ஜோக் நீர்வீழ்ச்சி மற்றும் சிவசமுத்ர நீர்வீழ்ச்சியிலிருந்து சித்ரகுத் நீர்வீழ்ச்சி வரையில், அனைத்தும் கண் கூசும் மினுமினுப்புடன் உள்ளன.
டீ-இங்க் ஆஃப்
மழைக்காலத்தில் மலைகள் பசுமையாக புதிதாக தோன்றுகின்றன. இது இந்தியாவில் பெரும்பாலான தேயிலை தோட்டங்களில் பயிரிடும் நேரமாகும். நீங்கள் தேநீர்-சுவைக்கும் சுற்றுப்பயணத்தை திட்டமிட்டு பல சுவைகளை அனுபவிக்கலாம்.
நிலக்கரியில் வறுத்த சோளம்
சிறிதளவிலான எலுமிச்சை, கருப்பு உப்பு மற்று மிளகாய் தூள்வுடன் இருக்கும் சோளம் இல்லாமல், மழைக்காலம் முழுமையற்றதாக தோன்றுகிறது. உங்களுக்கு வாய்ப்பு கிடைக்கும் போதெல்லாம் அனுபவிக்கவும்!
மழையை அனுபவிக்க தயங்க வேண்டாம் ஆனால் திட்டமிடுவதற்கு முன் நிச்சயமாக நீங்கள் வானிலை முன்னறிவிப்பை படிக்க வேண்டும்.