நீங்கள் கடலோரமாக அமைதியான விடுமுறைக்கு ஏங்குகிறீர்கள் என்றால், உண்மையில் இயற்கையின் அற்புதமான மேலும் சுற்றுலா பயணிகள் குறைவாக இருப்பதால் அழகாகவே இருக்கும் அருமையான கடற்கரைகள் உடுப்பியில் உள்ளன. எனவே நீங்கள் கர்நாடகாவிற்குப் பயணிக்க திட்டமிடுகிறீர்கள் என்றால், இந்த கடற்கரைகளைத் தவறவிடாதீர்கள்.
மால்பே கடற்கரை
இது தான் உடுப்பி நகரத்திலிருந்து மிக அருகாமையிலுள்ள கடற்கரை (6 கி.மீ. தொலைவில் உள்ளது). மால்பே கடற்கரையில் கூட்டம் குறைவாக தான் இருக்கும், எனினும், வாரஇறுதிகளில் பயணிகள் உள்ளூர் குடும்பங்கள் மற்றும் மணிப்பால் பல்கலைக்கழகத்திலிருந்து நிறைய மாணவர்கள் கடற்கரைக்கு வருவதை காணலாம். கடற்கரைக்கு செல்லும் பாதை வாய்க்கு ருசியான விலை மலிவான புதிய கடல் உணவு வகைகளைப் பரிமாறும் தெரு ஓர உணவு கடைகளால் நிரம்பி உள்ளன. மால்பேவுக்கு செல்லுதல் ஏராளமான தரமான உணவகங்களுக்காக உணவில் ஆர்வமுள்ளவர்களுக்கு உணவளிக்கும் பயணமாக இருக்கலாம். பார்வையாளர்கள் உட்கார்ந்து குளிர்ந்த காற்றை அனுபவிப்பதற்காக கடற்கரையின் நீளம் முழுவதும் பென்ஞ்சுகள் போடப்பட்டுள்ளன. ஆனால் நீங்கள் உண்மையிலேயே ஓய்வெடுக்க விரும்பினால், மணல் மீது மனிதர்களால் கட்டப்பட்டுள்ள சிறிய குடிசைகளில் ஒரு இடத்தைப் பதிவு செய்யவும்.
செயின்ட் மேரி தீவு
மால்பேயின் கடற்கரையில் அமைந்துள்ள, செயின்ட் மேரி தீவு அரபிக்கடலில் அமைந்துள்ள நான்கு சிறிய தீவுகளின் தொகுப்பு. மால்பே கடற்கரையிலிருந்து இந்த தீவுகளுக்கு வழக்கமாக பயணப்படகுகள் ஓடுகின்றன. பயணப்படகு சேவை காலை 9 மணிக்கு தொடங்கி மாலை 5 மணிக்கு முடிவடைகிறது. இந்த 7 கி.மீ. தூரமான பயணப்படகு சவாரிக்காக உங்களுக்கு ரூ.100 செலவாகும். தீவுகள் அதனுடைய தனித்துவமான தூண் போன்ற கருங்கல்லான எரிமலைக்குழம்பியின் புவியியல் உருவாக்கத்திற்காக அறியப்படுகின்றன. தீவின் அம்சங்களான மிகப் பெரிய பாறைகளின் உருவாக்கம் மற்றும் தென்னை மரங்கள் அதைச் சுற்றிப்பார்ப்பதற்கு சரியான இடமாக மாற்றுகிறது.
காபூ கடற்கரை
காபூ சுற்றுலா பயணிகள் குறைந்த அளவிலேயே அறிந்த சொர்க்கம், ஆனால் இப்பகுதியின் உள்ளூர் வாசிகள் மற்றும் மாணவர்களிடையே பிரபலமானது. இந்த அமைதியான கடற்கரை உடுப்பி நகரத்திலிருந்து சுமார் 12 கி.மீ. தொலைவில் அமைந்துள்ளது. இது உடுப்பி மற்றும் மங்களூர் செல்லும் வழியில், NH-66 (முன்பு NH-17) அருகில் அமைந்துள்ளது. மால்பேவுடன் ஒப்பிடும் போது இங்கு இருக்கும் கடல் மிகவும் கரடுமுரடானது. இது பாறைகள் மிகுந்த கடற்கரையாகும் மேலும் உயர்வான அலைகள் இருக்கும் நேரத்தில் தண்ணீரில் செல்லும் ஆபத்தான முயற்சி அறிவுறுத்தப்படவில்லை. இந்த கடற்கரையின் முக்கியமான ஈர்ப்பு 1901-ல் கட்டப்பட்டுள்ள கலங்கரை விளக்கம். இது அப்போது முதல் உறுதியாக நிலைத்திருக்கிறது. கலங்கரை விளக்கம் சுமார் 89 அடி உயரமானது நீங்கள் கொஞ்சம் படிக்கட்டுகளை ஏறினால் சுற்றியுள்ள அகலப் பரப்பான காட்சியை காணலாம். கடற்கரை முழுவதும் வரிசையாக அமைந்துள்ள தென்னை மரங்கள் மற்றும் சுற்றியுள்ள தழைத்த பசுமை இதைப் புகைப்படக்காரர்களின் பெருமகிழ்ச்சியாக மாற்றுகிறது. கடற்கரை முழுவதும் கான்கிரீட் பென்ஞ்சுகள் போடப்பட்டுள்ளன அங்கு உட்கார்ந்து கொண்டு கடல் அலைகள் கரையோரத்தில் வந்து மோதும் ஒலியையும் காட்சியையும் அனுபவிக்கலாம்.
அருகிலுள்ள இரயில்-நிலையம்: உடுப்பி