அவைகள் ‘மேற்கு தொடர்ச்சி மலைகளின் மகன்’ அல்லது மென்மையான மிருகங்கள் என்று அழைக்கப்படுகின்றன, அவைகள் மாநிலத்தின் விலங்காக உருவாகும் அளவிற்கு, யானைகள் எப்போதுமே கேரளாவின் கலாச்சாரத்தின் ஒருங்கிணைந்த பகுதியாக உள்ளன. அரசு அங்கீகார சட்டமாக அல்லது மத முக்கியத்துவமானதாக இருந்தாலும், இறைவனுக்கு சொந்தமான நாட்டில் எந்த விழாவாக இருந்தாலும் யானைகளின் வண்ணமயமான ஊர்வலங்கள் இல்லாமல் நிறைவடையாது.
இந்த மிகப் பெரிய விலங்கின் அத்தகைய முக்கியத்துவத்துடன், குருவாயூர் கோயிலுக்கு அருகில் இந்த செல்ல யானைகளுக்காக நிஜமான ‘ஸ்பா’ கட்டப்பட்டிருப்பது ஆச்சரியமான விஷயம் இல்லை, இங்கே இந்த யானைகளுக்கு ஜூலை மாதத்தில் அதிக அளவில் செல்லம் கொடுக்கப்படுகிறது. நாம் அதனுடன் தொடர்புடைய சில சுவாரஸ்மான உண்மைகள் சிலவற்றை கண்டறியலாம்-
• குருவாயூரில் குருவாயூர் தேவஸ்தான கோவிலின் நிர்வாகிகள் 11 மாதங்களான கோவில் பணிகளுக்கு பின் யானைகளுக்கு ஓய்வு அளித்து அவைகள் மீண்டும் அவற்றின் ஆரோக்கியத்தைப் பெற உதவும் வழியாக 1985-ல் யானைகளுக்கு புத்துயிர் அளிக்கும் முகாமை தொடங்கியது.
• பக்கதர்கள் தெய்வத்திற்கு யானைகளை நன்கொடையாக அளிப்பது இங்கே பொதுவான நடைமுறையாக இருக்கும் காரணத்தால், அவைகள் அனைத்தையும் கவனித்துக் கொள்ளும் படியான இடத்தை கோவில் உருவாக்க வேண்டும் எனவே அவர்கள் பன்னத்தூர் கொட்டா யானை நிலையத்தை, முன்னாள் அரண்மனை, சரணாலயமாக மாற்றி அதற்கு அனகொட்டா என்று மறுபெயரிட்டுள்ளனர், இது கிட்டத்தட்ட “யானை கோட்டை” என்று மொழிபெயர்க்கப்படுகிறது. கோவில் நிலத்திலிருந்து சுமார் மூன்று கிலோமீட்டர் தொலைவில் அமைந்துள்ளது, அனகொட்டா சுமார் 50 – 60 யானைகளைக் கொண்டிருக்கும் 10 ஏக்கர் வளாகமாகும்.
• ஜூலை மாதம் மழைக்காலத்தில் ஒவ்வொரு ஆண்டும், இந்த யானைகளுக்கு புத்துணர்வு அளிக்கப்படுகிறது. தேங்காய் நார் கொண்டு தேய்ப்பதன் மூலம் அவற்றின் யானைப்பாகன் அவைகளை மசாஜ் செய்யும் போது அவைகள் நீர் நிலையங்களில் ஓய்வெடுக்கின்றன.
• அனகொட்டாவில், நடவடிக்கைகள் மிகவும் கவனமாகவும் அன்பாகவும் செய்யப்படுகின்றன. சரணாலயத்துடன் இணைக்கப்பட்டிருக்கும் புத்துணர்வு மையம் இந்த மாபெரும் விலங்குகளுக்கு விரிவாக ஸ்பா சிகிச்சைகள் வழங்குகிறது. இந்த மாதத்தில், தந்தம் இருக்கும் மிருகங்களுக்கு வெறும் குளியல் மற்றும் மசாஜ் சிகிச்சைகள் மட்டுமல்லாமல் ஆயுர்வேத புத்துணர்வு மருந்துகள் கொண்ட மிகவும் ஊட்டச்சத்தான உணவு அளிக்கப்படுகிறது.
• சிகிச்சை, குறிப்பாக உணவுத் திட்டங்கள், சிகிச்சை யானைகளுக்கு மிகுந்த நன்மையளிக்கிறதா என்பதை உறுதி செய்வதற்கு கால்நடை நிபுணர்களால் கண்காணிக்கப்படுகிறது.
இது இங்கே யானைகளுக்கான முழுமையான அதிகமாக செல்லம் கொடுக்கும் கட்டமாகும் மேலும் அவைகள் ஒவ்வொரு துளியையும் அனுபவிக்கின்றன.
குறிப்பு – அனகொட்டா (பன்னத்தூர் கொட்டா யானை நிலையம்) தென் மாநிலம் கேரளாவில் கொச்சின் வடக்கே சுமார் 52 மைல்களில் (80 கிலோமீட்டர்) அமைந்துள்ளது.