தேஜூவின் மறைந்துள்ள வசீகரத்தைப் பார்வையிடுதல்

0
1247

தவாங், இட்டாநகர் மற்றும் ஜிரோ பள்ளாத்தாக்கு அருணாச்சலத்திலுள்ள பிரபலமான இடங்களாகும், ஆனால் கண்ணைக் கவரும்படியான மற்ற இடங்களும் உள்ளன என்று உங்களுக்குத் தெரியுமா? சலசலப்பான நகரம் மற்றும் சுற்றுலா ஹாட் ஸ்பாட்களிலிருந்து (முக்கியமான இடங்கள்) விலகி இயற்கையை நேசிப்பவர்கள் இந்த சுற்றிப் பார்க்கப்படாத இடங்களை கட்டாயம் பார்க்க வேண்டும்.

தேஜூ நகரம்

Tezu Town
லோகித் ஆற்றின் வழியே அருணாச்சலில் லோகித்தின் பெயர் அறியப்படாத மாவட்டத்தில் அமைந்துள்ள, சிறிய நகரம் தேஜூவில் நாட்டின் மிகவும் அழகான சில இடங்கள் உள்ளன. நவீனமயமாக்கல் மற்றும் துரிதமான தொழில்நுட்பங்கள் இன்னும் இந்த விந்தையான சிறிய நகரத்தை அடையவில்லை. இயற்கை அழகின் பொக்கிஷங்களைப் பரிசாக பெற்ற, தேஜூ மனிதர்கள் அவர்களின் உபகரணங்களை விட இயற்கையுடன் இணைந்திருந்த காலத்திற்கு உங்களைத் திரும்பி அழைத்துச் செல்லுகிறது. தேஜூவிற்கான அழகான பயணம் இங்கே மிகுதியான அழகுடன் இருக்கும் இடங்களில் அமைந்துள்ளது.

பரசுராம் குந்த்

Parsuram Kund
இறைவன் பரசுராம் அவர்களுக்குப் பின் பெயரிடப்பட்டது, பிரம்மபுத்திராவின் கரையில் இறைவன் பரசுராம் அவர்களுக்காக அர்ப்பணிக்கப்பட்டுள்ள கோவில் உள்ளது. இந்த குளத்தின் புனித நீரில் நீராடினால் ஒருவரின் அனைத்து பாவங்களும் கழுவப்படும் என்று நம்பப்படுகிறது. மேலும் இந்த நம்பிக்கை மகர சங்காரந்தி அன்று பரசுராம் குந்த்திற்கு நூற்றுக்கணக்கான புனிதப் பயணிகளை கவர்த்திழுக்கிறது.

க்ளோ லேக்

Glow Lake
பனியால் மூடப்பட்டுள்ள இமயமலையின் கீழ் பிறப்பிடமாக மற்றும் செழிப்பான பசுமையைச் சுற்றியுள்ள, இந்த ஏரி 5,000 அடி உயரத்தில் அமைந்துள்ளது. அழகான ஏரியில் ஓய்வெடுக்கலாம் அல்லது துணிச்சலாக சுற்றியுள்ள மலைகளில் மலையேறலாம்.

வாலாங்

Walong
அதனுடைய போர் நினைவுக்காக பிரபலமானது, வாலாங்கில் இருக்கும் நம்தி பள்ளத்தாக்கு மிகப் பெரிய சுற்றுலா இடமாகும். மூங்கில் மரங்களால் அலங்கரிக்கப்பட்டுள்ள வாலாங், 1962 ஆம் ஆண்டில் இந்தியாவை ஆக்கிரமித்த சீனப் படைகளை இந்திய வீரர்கள் கம்பீரமாக போர் புரிந்த இடமாக மிகவும் முக்கியத்துவம் பெறுகிறது.

தேஜூ அருங்காட்சியகம் மற்றும் கைவினை மையம்

Tezu Museum
இந்தியாவின் இந்தப் பகுதியில் இருக்கும் வாழ்க்கை முறை மற்றும் கலாச்சாரத்தைப் புரிந்து கொள்வதற்கு, இந்த அருங்காட்சியகத்தைப் பார்வையிடுதல் அவசியம். அருங்காட்சியகத்தில் இருக்கும் சில அரிய சேகரிப்புகளில் உள்ளூர் பழங்குடியினரால் பயன்படுத்தப்பட்ட ஆயுதங்கள், ஆடைகள் மற்றும் ஆபகரணங்களுடன் ஓவியங்களும் கையெழுத்துப்பிரதிகளும் அடங்கும். பிரம்பு கைவினைகளும் கைத்தறி கைவினைகளும் இங்கே காணப்படுகின்றன

டி ’எரிங் மெமோரியல் வனவிலங்கு சரணாலயம்

D'Ering Wildlife Sanctuary
சரணாலயம் புலிகள், யானைகள், காட்டு மான் மற்றும் காட்டு பன்றிகள் உட்பட பல்வேறு காட்டு உயிரினங்களின் இருப்பிடமாக உள்ளது. சாம்பார் மான் வெள்ளப்பெருக்கு புல்வெளிகளில் அமைந்துள்ள இந்த வனவிலங்கு சரணாலயத்தின் சிறப்பம்சமாகும். சராணாயலத்தில் சில அருகிவரும் உயிரினங்கள் உட்பட, 150-க்கும் மேற்பட்ட பறவை உயிரினங்களைப் பார்க்கலாம்.

தேஜூவுக்குப் எப்படி செல்வது?

  • அசாமில் தேமாஜி அருகிலுள்ள முர்காங்செலேக் மிகவும் அருகிலுள்ள இரயில் நிலையமாகும். கொல்கத்தா மற்றும் தில்லியிலிருந்து இரயில்கள் உள்ளன.
  • தேஜூவுக்கு செல்வதற்கான சிறந்த காலம்
  • தேஜூவுக்கு மிகவும் விசேஷமாக கோடை மாதங்களில் (ஏப்ரல் முதல் ஜூலை வரை) செல்லலாம். ஆனால் செப்டம்பரும் அக்டோபரும் கூட சிறந்த காலமாகும்.
  • எனவே, நீங்கள் ஜிரோ பள்ளத்தாக்கு அல்லது இட்டாநகருக்கு பயணித்தால், இந்த அழகான சுற்றுலா இடங்களை தவறவிடாதீர்கள்.