சங்கிலி இழுப்பது குறித்து நீங்கள் அறிந்திராத உண்மைகள்.

0
2027
Tamil Railway Blog

இரயில்களில் பயணிக்கும் போது ஒவ்வொரு இரயில் பெட்டிகளிலும் அவசரகால சங்கிலிகள் இருப்பதை நீங்கள் பார்த்திருப்பீர்கள். எனினும், நீங்கள் சங்கிலி இழுப்பது பற்றி செய்ய வேண்டிவைகள் மற்றும் செய்யக்கூடாதவைகளை அறிந்திருக்க மாட்டீர்கள். இரயிலை இழுப்பது குறித்து அனைத்தையும் புரிந்து கொள்ள கீழே படிக்கவும்.

யாராவது சங்கிலியை இழுக்கும் போது இரயில் எப்படி நிறுத்தப்படுகிறது?

Chain Pulling facts

அலாரம் சங்கிலிகள் இரயிலின் முக்கியமான பிரேக் பைப்புடன் இணைக்கப்பட்டுள்ளன. இந்த பிரேக் பைப்பு நிலையான காற்று அழுத்தத்தைப் பாரமரித்து, சுமூகமாக நகர இரயிலுக்கு உதவுகிறது. அவசரகால சங்கிலி இழுக்கப்படும் போது, பிரேக் பைப்பில் இருக்கும் காற்று சிறிய வழியின் மூலம் வெளியேறுகிறது. காற்று அழுத்தம் குறைவது இரயில் மெதுவாக செல்வதற்கு வழிவகுக்கிறது. லோகோ பைலட் விரைவாக காற்று அழுத்தத்தில் ஏற்படும் இந்த வீழ்ச்சியை கவனித்து இரயிலின் இயக்கத்தை கட்டுப்படுத்த தொடங்குகிறார். இரயில் குறுகிய தண்டவாளத்தில் ஓடுவதால், அதை திடீரென்று நிறுத்த முடியாது, அவ்வாறு செய்வது சமமின்மைக்கு வழிவகுத்து இரயில் தடம்புரளலாம்.

யார் சங்கிலியை இழுத்தார்கள் என்று RPFக்கு எப்படி தெரிய வருகிறது?

இரயில் பெட்டிகளில் அவசரகால ஃபிளாஷர்கள் (விரைவு இணைப்பிகள்) பொருத்தப்பட்டுள்ளன மேலும் இந்த ஃபிளாஷர்கள் (விரைவு இணைப்பிகள்) அவசரகால சங்கிலி இழுக்கப்படும் தருணத்தில் செயல்படுத்தப்படுகின்றன. சங்கிலி இழுக்கப்பட்ட இடத்திற்கு கார்டு, உதவி ஓட்டுனர் மற்றும் RPF பணியாளர் வந்து சங்கிலியை கையமுறையாக மீட்டமைக்கும் வரையில் என்ஜின் பைலட்டின் கட்டுப்பாடுகளுக்குள் ஒரு விளக்கும் ஒளிர தொடங்கி ரீங்காரம் செய்கிறது. சங்கிலி மீட்டமைக்கப்பட்டவுடன், காற்று அழுத்தம் படிப்படியாக சாதாரணமான நிலைக்கு திரும்பி இரயில் புறப்படுவதற்கு தயாராகுகிறது. RPF யார் சங்கிலியை இழுத்தார்கள் என்று கண்டுபிடிக்க இரயில்பெட்டியில் இருக்கும் பயணிகளிடம் கேள்வி கேட்கிறார்.

சங்கிலியை இழுத்ததற்கான தண்டனை என்ன?

Chain-Pulling-Punishment

செல்லுபடியாகும் காரணங்கள் இல்லாமல் சங்கிலியை இழுப்பது இந்திய இரயில்வே சட்டத்தின் பிரிவு 141 கீழ் தண்டனைக்குரிய குற்றமாகும். சட்டப்படி, எந்த விதமான காரணமும் இல்லாமல் இரயிலின் பொறுப்பான இரயில்வே பணியாளர் மற்றும் பயணிகள் இடையிலான தகவல் தொடர்பில் பயணி ஒருவர் தலையீடுகிறார் என்றால், பின்னர் அந்த நபர் குற்றவாளி என கருதப்படலாம். குற்றவாளி என நிரூபிக்கப்பட்டால் நபருக்கு ஒரு ஆண்டு சிறை தண்டனை கிடைக்கும் அல்லது அபராதம் ரூபாய். 1000 வரை நீட்டிக்கப்படலாம்.

சங்கிலியை இழுப்பதற்கு ஏற்றுக்கொள்ளக்கூடிய நிலைமைகள் எவை?

Acceptable-Cases-for-Chain-Pulling

இரயிலில் சங்கிலியை இழுப்பதற்கு சில ஏற்றுக்கொள்ளக்கூடிய நிலைமைகளாக உள்ளடங்குபவை: சக பயணிகளில் ஒருவர் நகரும் இரயிலில் இருந்து விழுதல், இரயிலில் தீ, இரயில் நிலையத்திலேயே குடும்பத்தினரை விட்டுச் செல்லுதல், நிறுத்தப்பட்ட நேரம் போதுமானதாக இல்லாத இரயில் நிலையத்தில் வயதான அல்லது மாற்றுத்திறனாளியுடன் ஏறுதல், மருத்துவ அவசரகால நிலைமைகள், கொள்ளை போன்ற பாதுகாப்பு அவசரகால நிலைமைகள்.

இரயிலில் சங்கிலியை இழுப்பது ஏதாவது இயற்பியலான சேதத்திற்கு வழிவகுக்குமா?

Accident-due-to-Chain-Pulling

இரயில் மிகவும் வேகமாக ஓடிக்கொண்டிருக்கும் போது சங்கிலி இழுக்கப்பட்டால் இரயில் தடம்புரளுவதற்கான நிகழ்தகவு அதிகம். மேலும், திடீரென்று இரயிலை நிறுத்துதல் (சங்கிலியை இழுப்பதினால்) தொடர்ச்சியான எதிர்விளைவை ஏற்படுத்தலாம். இது நீங்கள் ஏறியுள்ள இரயிலை மட்டும் தாமதப்படுத்தாமல் அதே வழியில் பயணித்து கொண்டிருக்கும் அடுத்த இரயில்களையும் தாமதப்படுத்துகிறது.