இந்தியா முழுவதும் பல்வேறு கோவில்கள் உள்ளன. பெரும்பாலான கோவி;கள் அழகான வடிவமைப்பினையும் மற்றம் நாட்டின் கட்டிடக்கலை அழகியலையும் வெளிப்படுத்தும் வகையில்அ மைந்துள்ளன. எனினும், சில கோவில்கள் வழக்கத்திற்கு மாறான கட்டமைப்புகளைக் கொண்டுள்ளன. இந்தப் பதிவில் அத்தகைய சில ஐந்து கோவில்கள் குறித்து நாம் பார்க்கலாம்.
- குஜராத், கவி கம்போய், ஸ்தம்பேஸ்வர் மஹாதேவ் கோவில்: இந்த 150 ஆண்டுகள் பழமை வாய்ந்த சிவன் கோவில், அரபிக் கடல் மற்றும் காம்பத் வளைகுடா சந்திக்கும் பகுதியில் அமைந்துள்ளது. இக்கோவிலுக்கு காலை வேளை அல்லது குறைவான அலை இருக்கும் நேரங்களிலேயே வருகை தர முடியும். அதிக அலைகள் கொண்ட நேரத்தில் இந்த கோவில் மூழ்கும் தன்மையைக் கொண்டுள்ளதால், மறையும் கோவில் என்று பிரபலமாக அழைக்கப்படுகிறது.
- தமிழ்நாடு, தஞ்சாவூர், பிரகதீஸ்வரர் கோவில்: இக்கோவில் மிக உயரமான கோபுரத்தைக் கொண்டுள்ள போதிலும் இதன் நிழல் தரையில் விழுவதில்லை. சிலர் இதற்குக் காரணமாக கோவிலின் தனித்துவமிக்க வடிவமைப்பினை கருதினாலும், சிலர் இதில் ஆன்மீக தன்மையையும் காண்கின்றனர்.
- உத்திரப்பிரதேசம், வாரணாசி, சிவன் கோவில்: இக்கோவில் 150 ஆண்டுகளுக்கு முன்பாக கட்டப்பட்டதாகும் மற்றும் மங்களகரமான கோவில்களில் ஒன்றாகத் திகழ்கிறது. 1830 – களில், சைஇந்தியா கட்டின் கட்டுமானம் காரணமாக இக்கோவில் சதிலமடைந்தது மற்றும் அன்று முதல் கங்கையில் மூழ்கியது.
- ஆந்திரப்பிரதேசம், அனந்தபூர், வீரபத்திர கோவில்: 70 தொங்கும் தூண்களுடன், விஜயநகர கட்டிடக்கலைக்கு எழுத்துக்காட்டா இந்த கோவில் திகழ்கிறது. இந்த அற்புதத்தினை புரிந்துகொள்ள, பிரிட்டிஷ் பொறியியலாளர் ஒருவர் சில தூண்களை கழற்ற முயற்சித்ததாகவும், அது தோல்வியில் முடிந்ததாகவும் பல மக்கள் நம்புகின்றனர்.
- தமிழ்நாடு, திருச்சிராப்பள்ளி, வெக்காலி அம்மன் கோவில்: கோவில் கர்ப்பக்கிரகத்தின் மீது எத்தகைய மேற்கூரையும் இல்லை. பலமுறைகள் முயற்சித்த போதும், மேற்கூரை கட்டுமானம்சா த்தியப்படவில்லை என நம்பப்படுகிறது. இதனால், கருவறையிலிருக்கும் தெய்வம் சூரிய ஒளியில் நேரடியாகப் படும் வகையில் அமைந்திருக்கும்.